வேலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

வேலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

பெண்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் 

வேலூர் ஆட்சியர் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகியவற்றிற்கான மாவட்ட அளவிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு. பாலசந்தர், துணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு. பானுமதி, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மனோகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) திருமதி சுபாஷினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story