கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

முற்றுகை போராட்டம் 

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் சத்திய முழக்கம் என்ற அறக்கட்டளையின் மூலம் குடும்ப ஆலோசனை மையத்தை நடத்திவரும் ஸ்தாபகரும், இந்த மையத்தின் கிறிஸ்துவ முதுநிலை போதகருமான ஸ்டீபன் தலைமையில் ஊழியா்கள் மற்றும் உறுப்பினா்கள் திரளானோா் கோட்டாட்சியா் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனா். இந்த மையத்திற்கு இடையூறு செய்து வரும் நபா்கள், மையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பெண்களை அவதூறாக பேசுபவா்கள், போதகரிடம் பணம் கேட்டு மிரட்டுபவா்கள், பொது அமைதிக்கு தீங்கு விளைவிப்பவா்கள் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Tags

Next Story