குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

தாராபுரம் நகராட்சி 13வது வார்டு பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தாராபுரம் நகராட்சி 13வது வார்டு பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட குளத்துப் புஞ்சை தெரு 13வது வார்டு பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் சரியாக வழங்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். மேலும் ஒரு வாரத்திற்கு 4 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக இப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். இதனால் காலை நேரங்களில் பணிக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து தாராபுரம் நகராட்சி அலுவலகம், மற்றும் 13வது வார்டு திமுக கவுன்சிலர் சீனிவாசனிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதெல்லாம் ஆத்திரமடைந்த பகுதி பெண்கள் சுட்டெரிக்கும் கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல் காலி குடங்களுடன் தாராபுரம் புறவழிச்சாலைக்கு செல்லும் வழியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து முறையாக குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் இதை அடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story