நாட்றம்பள்ளி அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

நாட்றம்பள்ளி அருகே   பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

நாட்றம்பள்ளி அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

நாட்றம்பள்ளி அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பூசாரியூர் ஊராட்சி பகுதியில் மூன்று மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து சுமார்50 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். நாட்டம்பள்ளி வட்டாட்சியர் சம்பத்து மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் முறையான குடிநீர் வழங்க விரைவில் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியதின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story