குடிநீர் வழங்கவில்லை என காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!

குடிநீர் வழங்கவில்லை என காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!

சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்கவில்லை என காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்கவில்லை என காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புலிகுட்டை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

இது குறித்து பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளனர் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் முக்கிய பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் சாலையில் நின்றனா இதன் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகிர். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இருந்தபோதிலும் சமாதானம் ஆகாமல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன.

Tags

Next Story