மகளிர் கல்லூரி உருவாக்கி தருவதாக பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தர்மபுரி நகரப் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி பெண்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பு.
தர்மபுரி நகரத்திற்கு உட்பட்ட குமாரசாமி பேட்டை,உழவர் தெரு,மாரியம்மன் கோவில் தெரு,பென்னாகரம் ரோடு, பகுதியில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொது மக்களிடையே மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேசும்போது தர்மபுரிக்கு அரசு மகளிர் கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன், இளைஞருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த பாடுபடுவேன், சிப்காட் பணியில் தொடங்குவதற்கு பாடுபடுவோம் என்று பொதுமக்களிடையே மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தினர். உடன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டி கே ராஜேந்திரன் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் பாமக நகரக் கழக செயலாளர் வெங்கடேஷ் சத்தியமூர்த்தி கட்சி நிர்வாகிகள் கௌவரப்பன் சிவகுமார் செல்வராஜ் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story