இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணை

இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணை

பைல் படம் 

திருச்செந்தூர் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் பொன் மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் ஜாக்சன். இவரது மனைவி ப்ரைஸா (34). இந்த தம்பதிக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்தது. 6 மாத குழந்தை உள்ளது. தற்போது ஜாக்சன் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் செல்போனில் பேசும்போது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரைஸா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story