மகளிர் உரிமை தொகை கேட்டு கலெக்டரிடம் பெண்கள் புகார்

மகளிர் உரிமை தொகை கேட்டு  கலெக்டரிடம் பெண்கள் புகார்
புகாரளித்த பெண்கள்.
தகுதியுடைய பெண்களுக்கு உரிமைதொகை கிடைக்கவில்லை என புகார்
தமிழக அரசு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ருபாய் வழங்கி வருகிறது. இது தகுதியுடைய பலருக்கு கிடைக்கவில்லை என புகார் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன்புதூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , ராஜாக்கமங்கலம் ஒன்றிய குழு சார்பில், மாவட்ட செயலாளர் ராஜகுமார் தலைமையில் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் இன்று மனு அளித்தனர். மேலும் அதிகாரிகளின் மெத்தன போக்கினால் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்காமல் இழுத்தடிப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பெண்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story