குடும்ப பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

குடும்ப பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

தாரமங்கலம் போலீசார் விசாரணை

தாரமங்கலத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தேவி மூன்று வயது பெண் குழந்தையுடன் கூலி வேலை செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் முருகன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி தேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story