பெண் தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை.

பெண் தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை.

சரண்யா

கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சமபவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் எசனை கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி சரண்யா (28). இவர்களுக்கு சானியா ஸ்ரீ வயது 9 , சஜித் வயது ஏழு ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சரண்யா -மதியழகன் காதல் திருமணம் செய்திருந்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதியழகனை பிரிந்து சரண்யா பெரம்பலூர் ஜமால் நகர் பகுதியில் தங்கி வந்துள்ளார், மேலும் உழவர் சந்தை பகுதியில் பூ விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார், இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்., இது குறித்து தகவல் அறிந்த சரண்யாவின் தாயார் சாந்தி மற்றும் தகப்பனார் அசோக்குமார் ஆகியோர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரண்யாவின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சரண்யா உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story