காட்டு யானை தாக்கி பெண் பலி - கிராம மக்கள் சாலை மறியல்

ஒசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை ஒற்றை யானை துரத்தி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிராம மக்கள் அவரது உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்து 18 யானை கூட்டங்களை கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது இந்நிலையில் ஒற்றை யானை மட்டும் வனப் பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டு இரவு நேரங்களில் வெளியேறி அருகே உள்ள விவசாயிகளின் விளைப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது, நேற்று அதிகாலை அந்த ஒற்றை யானை அனுமந்தபுரம் பகுதியில் சுற்றி திரிந்தது அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மமத்தா வயது 27. இவர் கெலமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்காக சென்ற போது வழியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியிடம் அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஒற்றை அணை துரத்தி தாக்கியதில் பெண் மட்டும் பலியானார். வாகன ஒட்டி வாகனத்தை விட்டு வாகன ஓட்டி தப்பிச் சென்றார். தகவல் அறிந்து கிராம மக்கள் பெண் உடலை வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது மேலும் சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் ஆனாலும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என உடலை வைத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒற்றை யானையும் சிறிது நேரம் அப் பகுதியிலேயே சுற்றி திரிந்தது .அதனை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்கு விரட்டினர். சாலை மறியல் காரணமாக உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Tags

Next Story