மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள் கண்காட்சி

நாமக்கல்லில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது

நாமக்கல் மாவட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் கீழ், 2023-2024-ஆம் ஆண்டிற்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்திப் பொருட்களை பொதுமக்களிடையே சந்தைப்படுத்திட ஏதுவாக கட்டாயக் கண்காட்சி (Mandatory Exhibition) நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட நாமகிரித் தாயார் மண்டபத்தில் 16.12.2023 முதல் 25.12.2023 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்திப் பொருட்களை பார்வையிட்டு, மகளிர் சுயஉதவிக்குழுவினா் தயாரித்த பொருட்களை வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவா் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.



Tags

Next Story