மின் ஊழியர் எனக் கூறி வசூல் செய்த பெண்கள்

மின் ஊழியர் எனக் கூறி வசூல் செய்த பெண்கள்

மின் ஊழியர் 

கோபால்பட்டி அருகே தி.வடுகபட்டியில் மின் ஊழியர் எனக் கூறி வசூல் செய்த மோசடி பெண்கள்
கோபால்பட்டி அருகே தி.வடுகபட்டியில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் 30 வயது மதிக்கதக்க 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களை மின்சார வாரிய அலுவலக ஊழியர்கள் என அறிமுகப்படுத்தி கொண்டு வீட்டு மின் இணைப்பு எண்ணை புதிதாக எழுதி ஒட்ட வந்துள்ளதாகவும் அதற்கு ரூ.50 கட்டணம் என கூறி உள்ளனர். இதனை நம்பிய பலர் ரூ.50 கொடுத்துள்ளனர். ஒரு சிலர் சந்தேகம் எழுப்பவே சம்பந்தப்பட்ட பெண்கள் தப்பினர்.சில மாதங்களுக்கு முன்பு தி.பாரைபட்டியிலும் இதே போன்று மின்சார வாரியத்தின் பெயரை கூறி இதே போன்ற மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story