மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்:  கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்


தமிழகம் முழுவதும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர் களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்த திட்டத்திற்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியில்லை என பலரது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுபட்ட நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட் டது. இதை தொடர்ந்து இ-சேவை மையங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவல கங்களில் பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கினார்கள். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் ஏராளமானோர் இன்று குவிந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று கலைஞர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உள்ள குறைபாடுகளைகளைய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மாதம் தோறும் 1000 வழங்கப்பட்டு வந்த சிலருக்கு 2-வது மாதம் பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Next Story