புதுக்கோட்டையில் மகளிர் வினாடி - வினா போட்டி!

புதுக்கோட்டையில் மகளிர் வினாடி - வினா போட்டி!

வினாடி வினாவில் கலந்து கொண்டவர்கள் 

புதுக்கோட்டையில் மகளிர் வினாடி - வினா போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மகளிர் அணிக்கான வினாடி வினா போட்டி புதுக்கோட்டை பாலம் நகரில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ஏவிசிசி கணேசன் தலைமை வகித்தார்.

திருச்சி லோக்சபா தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்ஜி. ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண் டார். மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம், செயலாளர் மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதாகர், மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் கார்த்திக், நகர செயலாளர்கள் லட்சும ணன், சக்திவேல்,

நிர்வாகிகள் குமார், சுப்ரமணியன், தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் மத்திய அரசு திட்டங்கள், சாதனைகள் தொடர்பான கேள்விகளை கொண்டு வினாடி, வினா நடத்தப்பட்டு சிறப்பாக பதிலளித்த பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story