மகளிர் சுயஉதவி குழு கடன் - கீழத்தாழனூர் கூட்டுறவு கடன் சங்கம் முதலிடம்

மகளிர் சுயஉதவி குழு கடன் - கீழத்தாழனூர் கூட்டுறவு கடன் சங்கம் முதலிடம்

விருது 

திருக்கோவிலூர் ஒன்றியம், கீழத்தாழனுார் கூட்டுறவு கடன் சங்கம்,மகளிர் சுய உதவி குழுவினர் 681 பேருக்கு, ரூ. 3 கோடி கடன் வழங்கி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. இதனைப் பாராட்டி கள்ளக்குறிச்சியில் நடந்த அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மண்டல இணை பதிவாளர் யசோதா தேவி தலைமை தாங்கி, வங்கியின் செயலாளர் அண்ணாதுரையிடம் சிறந்த வங்கிக்கான கேடயத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி, துணைப்பதிவாளர் கீர்த்தனா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

Tags

Next Story