சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் பெண்கள் ஞாயிறு பவனி

சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் பெண்கள் ஞாயிறு பவனி
பெண்கள் ஞாயிறு பவனி 
பாவூா்சத்திரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் பெண்கள் ஞாயிறு விழாவை முன்னிட்டு பெண்கள் முக்கிய சாலைகளில் பவனி வந்தனர்.
திருநெல்வேலி திருமண்டலம் பாவூா்சத்திரத்தில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் பெண்கள் ஞாயிறு கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 8 மணிக்கு பெண்கள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பாவூா்சத்திரத்தின் முக்கிய பகுதிகளில் பவனியாக சென்று ஆலயம் வந்தடைந்தனா். தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பாடல்கள், வேதவாசிப்பு, ஜெபம் நடைபெற்றது. அனி தனசன் இறை செய்தி வழங்கினாா். ஆராதனை முடிவில் அனைவருக்கும் ஐக்கிய விருந்து அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் சேகர குருவானவா் டேனியல் தனசன், சபை ஊழியா் தினகா் சந்தோஷசிங் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Tags

Next Story