"பாலியல் குற்றம் குறைய முதலில் ஆண்பிள்ளைக்கு சொல்லி கொடுங்க"

பாலியல் குற்றம் குறைய முதலில் ஆண்பிள்ளைக்கு சொல்லி கொடுங்க

மகளிர் தினம் கொண்டாட்டம்

திருப்பத்தூரில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் உலக மகளிர் தினவிழா இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தீபா பூபதி தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் உலக மகளிர் தின விழா இந்திய மாதார் தேசிய சம்மேளனத்தின் செயலாளர் தீபா பூபதி தலைமையில் இனிப்புகள் வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடினர். பின்னர் பேசுகையில், பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்பது போல் ஆண்பிள்ளைக்கும் சொல்லி வளர்த்தால் பாலியல் தொல்லை குற்றங்களை சிறிது தடுக்கமுடியும் என்றார்.

நிகழ்ச்சிக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தீபா பூபதி தலைமை தாங்கினார். மேகலா ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். அகிலாண்டேஸ்வரி முன்னிலை வகித்தார். மாதர் சங்க கொடியை தீபா பூபதி ஏற்றி வைத்தார். மாதர் சங்க ஒன்றிய குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.ஜோலார்ப் பேட்டை ஒன்றிய குழு உறுப்பினர் பூபதி, அவர்களும் விவசாய சங்க நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஆனந்தன் அவர்களும் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முல்லை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Tags

Next Story