படளாம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

படளாம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
படளாம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுராந்தகம் அடுத்துள்ள படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் கரும்பு அரவை நிறுத்தம். செங்கல்பட்டு அடுத்த, படாளம் பகுதியில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த ஆலையில் ஜனவரி துவக்கத்தில் கரும்பு அரவை ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து ஆறு மாத காலம் வரையில் ஆலை இயங்கும்.

அடுத்த ஆறு மாத காலத்திற்கு இயந்திரங்கள் பழுது மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சக்கரை உற்பத்திக்கு கடந்த டிசம்பர் மாதம் பனி துவங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரவைப் பணி, நான்கு நாட்களாக நடைபெறாமல் இருந்தது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு,

இந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து மீண்டும் பணி துவங்கி செயல்பட்டு வருகிறது. பகுதி விவசாயிகள் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செங்கல்பட்டு விழுப்புரம் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டம் புதுச்சேரி பகுதிகளில் இருந்து கரும்பு வருவது வழக்கம். இந்த ஆலையில் சுமார் 360 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு முறையான ஊதியம் அளிப்பதில்லை, உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் ஊதிய உயர்வு வழங்கவும் தினக்கூலியை மாதம் ஒருமுறை மாலை நிர்வாகம் நேரடியாக வங்கியில் செலுத்தவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திடீரென பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சர்க்கரை ஆலையில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1800 முதல் 2000 டன் வரை கரும்பு அரவை நடைபெறுகிறது வேலை நிறுத்துதல் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் வரை நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் கொண்டு வந்த கரும்புகள் டிராக்டரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் , வெயில் காரணமாக அவற்றின் எடையும் குறைய வாய்ப்புள்ளது. தங்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் சர்க்கரை ஆலை சார்பில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story