யானைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்!

யானைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்!

பைல் படம்

கோவை வனக்கோட்டத்தில் மூன்று நாள் நடக்கும் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் 26 பேர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை வனக்கோட்டத்தில் உள்ள மதுக்கரை,போளுவாம்பட்டி,கோயமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம்,காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.முதல் நாளான இன்று யானைகளை நேரில் பார்த்து கணக்கெடுப்பது நாளையும் நாளை மறுதினமும் யானைகளின் எச்சங்களை கொண்டும், நீர் நிலைகளிலும் யானைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. கோவை வனக்கோட்டத்தில் வனவர்,வனக்காப்பாளர்,வனக்காவலர்,வேட்டை தடுப்பு காவலர்,தன்னார்வலர்கள் என 26 பேர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story