வீடு புகுந்து 3 பேர் மீது தாக்குதல் தொழிலாளி கைது !

வீடு புகுந்து 3 பேர் மீது தாக்குதல் தொழிலாளி கைது !
கைது
வெள்ளிசந்தை அருகே வீடு புகுந்து 3 பேர் மீது தாக்குதல் நடத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி சாரதா. அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன் (55) தொழிலாளி. இந்த இரு குடும்பத்தினருக்கும் வழி பாதை சம்பந்தமாக முன்விரோம் உள்ளது. நேற்று சிவலிங்கம் தனது வீட்டு வளாகத்தில் நின்று கொண்டு இருந்து போவது அங்கு வந்த கணேசன் மகன் பிரனேஷ் 24) சிவலிங்கத்தை திட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த கணேசன் மற்றும் அவரது மூத்த மகன் ரதிஸ் 26) ஆகியோர் கையில் ஆயுதங்களுடன் சிவலிங்கத்தின் வீட்டுக்குள் புகுந்து தகராறு செய்துள்ளனர். இதை சிவலிங்கத்தின் மகள் செல்போனில் வீடியோ எடுத்தாராம் இதனால் அவரது செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்துள்ளனர். இதில் சிவலிங்கம், பிரனேஷ் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இருதரப்பினரும் வெள்ளி சந்தை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இருதரப்பை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story