விழுப்புரம் அருகே மாணவியை தொந்தரவு செய்த தொழிலாளி போக்சோவில் கைது

விழுப்புரம் அருகே மாணவியை தொந்தரவு செய்த தொழிலாளி போக்சோவில் கைது

கோப்பு படம் 

விழுப்புரம் அருகே மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்திய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி, தற்போது பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார். சம்பவத்தன்று மாணவி, அதே பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு தண்ணீர் எடுத்து வர சென்றார்.

அப்போது அங்கு வந்த தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் புன்னகை மன்னன் (வயது 27) என்பவர், மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அம்மாணவி, தனது தாயிடம் கூறி னார். உடனே அவர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் புன்னகை மன்னன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக் குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூலிதொழிலாளியான புன்னகை மன்னனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது என் பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story