சேலத்தில் தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு

சேலத்தில் தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு

வழிப்பறி 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சில்லாரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் ( 28). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நெத்திமேடு பஸ் நிறுத்தம் அருகே நடந்து செனறார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சதீஷ்குமாரை வழிமறித்து சரமாரியாக தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் போனை இறுக பிடித்து கொண்டதால் ரூ.1500 பறித்துக் கொண்டு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story