தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

பைல்படம்

குடிமல்லூர் கிராமத்தில் வெல்டிங் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கிராமம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ஆனந்தன் (38). இவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story