மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து தற்கொலை

வெள்ளிச்சந்தையில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள காட்டுவிளையை சேர்ந்தவர் ஜாண்ராஜ் (54) கூலித்தொழிலாளி இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாண்ராஜ் மரத்தில் ஏறும்போது தவறி கீழே விழுந்ததில் அவரது இடது கை ஒடிந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் ஜாண்ராஜ் மீண்டும் மது குடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரது மனைவி வெர்ஜின் மேரி (45) , மது குடித்தால் ஒடிந்த கை எப்படி குணமாகும்? என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜாண்ராஜ் வீட்டிலிருந்து வெளியே சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். தகவல் அறிந்த குடும்பத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இறந்தார். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story