குடும்ப தகராற்றில் தொழிலாளி தற்கொலை

குடும்ப தகராற்றில் தொழிலாளி தற்கொலை

தற்கொலை

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே குடும்ப தகராற்றில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பகம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாசநாயக்கன்பட்டி சாலைப்புதூரைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் வயது 37 தொழிலாளி. இவரது மனைவி திவ்யா 27 இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் குடும்பத்த தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு வந்தனர். அருகில் டீக்கடைக்கு செல்வதாக கூறி சென்ற மாயக்கண்ணன் டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார்.

அங்கு மதுவில் சல்பாஸ் விஷ மருந்தை போட்டு குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார் அருகில் இருந்தவர்கள் மனைவிக்கு தகவல் கொடுத்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாயக்கண்ணன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story