கண்ணமங்கலம் அருகே தொழிலாளி தற்கொலை

கண்ணமங்கலம் அருகே தொழிலாளி தற்கொலை
கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் அடுத்த சின்னபுஷ்பகிரி கிராமம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (60), தொழிலாளி.இவர் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து, மாத்திரை சாப்பிட்ட பிறகும் கூட நோய் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த பன்னீர்செல்வம் கடந்த 15-ந் தேதி, தனது மாட்டு கொட்டகையில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story