கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கடன் தொல்லையால் மன உளைச்சலில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பிணந்தோடு கரைகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்.தேன் பெட்டி தொழிலாளி.அவரது மனைவி ஷீலா ஜெப குமாரி.இந்த தம்பதிக்கு 2 மகன் கள் உள்ளனர். எட்வின் எட்வின் ஜெயக்குமார் ஜெயக்குமார் சூரியகோடு பகுதியில் நிலம் வாங்கி வீடுகட்டி வந்தார்.இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் எட்வின் ஜெயக்குமார் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது அறைக்கு சென்ற எட்வின் ஜெயக்குமார் நீண்டநேரம் ப வெளியே வரவில்லை.இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கு உள்ளே சென்று பார்த்தபோது விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் எட்வின் ஜெயக்குமார் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவர் மீட்கப் பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.தீவிர சிகிச்சை அளித்த பிறகும் எட்வின் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து ஷீலா ஜெபகுமாரி அளித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story