தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தற்கொலை 

பெரம்பலூரில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் வெங்கடேசபுரம் காலனியை சேர்ந்தவர் நம சிவாயம் (வயது 41). இவர் நகை செய்யும் தொழிலாளியாக - பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரபாவதி. இவர்க - ளுக்கு சஞ்சய் (18) என்ற மகனும், இசானி (9) என்ற மகளும் உள்ளனர். பிரபாவதி தனியார் பள்ளியில் ஆசிரியையாக - பணியாற்றி வருகிறார். நமசிவாயத்திற்கு மது குடிக்கும் பழக் கம் இருந்துள்ளது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலை நமசிவாயம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர்போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story