மது அருந்தி விட்டு வந்த தொழிலாளி திடீர் சாவு

மது அருந்தி விட்டு வந்த தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீர் மரணம் 

ராணிப்பேட்டை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை சிப்காட் வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (43). கூலி வேலை செய்து வந்தார். இவர் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர், சுயநினைவு இல்லாமல் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நீலகண்டன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பாக புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story