மினி லாரி மோதி தொழிலாளி பலி

மினி லாரி மோதி தொழிலாளி பலி

விபத்தில் பலி

புதுக்கோட்டை மாவட்டம்,பாப்பான்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மினி லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமயம் அருகே பெருங்குடி பாப்பான்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ரமேஷ்(24). இவர் கே.புதுப்பட்டிக்கு பைக்கில் சென்றபோது காமாட்சிபுரம் அருகே மாடு குறுக்கே வந் துள்ளது. இதற்காக ரமேஷ் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போ அவரை பின்தொடர்ந்து வந்த மினி லாரி பைக்மீது பயங் கரமாக மோதியது. இதில் ரமேஷ் அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story