லிப்டில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

லிப்டில் சிக்கி தொழிலாளி  உயிரிழப்பு
லிப்டில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு ..

ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி.இஸ்திரி செய்யும் இவர் குடியிருப்பு பகுதிகளில் துணிகளை வாங்கி இஸ்திரி செய்து வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்.

அப்பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் லிப்ட் மூலம் சென்று துணிகளை வாங்கி கொண்டு மீண்டும் லிப்ட் வழியாக கீழே இறங்க சென்றபோது லிப்ட் கீழ் தளத்தில் சென்றது கவனிக்காமல் லிப்ட் மாடியில் உள்ள பாதுகாப்பு அறை திறந்தால் தவறி கீழே விழுந்தார்.

திடீரென மேலே ஏற முயற்சி செய்த போது லிப்ட் இயங்கிய ததால் லிப்டில் சுப்பிரமணி இடது கை சிக்கி உயிரிழந்தார்.ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஙிசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story