காட்டு யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு

காட்டு யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு

ஆறுகாணி ஒருநூறாம்வயல் பகுதியில் காட்டு யானை மிதித்து தொழிலாளி உயிரிழந்தார்.

ஆறுகாணி ஒருநூறாம்வயல் பகுதியில் காட்டு யானை மிதித்து தொழிலாளி உயிரிழந்தார்.

அருமனை அருகே உள்ள ஆறுகாணி ஒருநூறாம்வயல் பகுதியை சேர்ந்தவர் மது.தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான தண்ணீரை எடுப்பதற்காக உயரமான மலைப்பகுதியில் இருந்து குழாய் போட்டிருப்பார்கள். இந்தகுழாய் மூலம் மலையில் இருந்து ஊற்றுநீர் தானாக இவர்களது வீட்டுக்கு வரும். இந்தநிலையில் நேற்று இந்த குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் மதுவும் அவரது 3. நண்பர்களும் குழாய் போடப்பட்டிருந்த இடத்தை நோக்கி சென்றனர் அப்போது அடர்ந்த வனப்பகுதியில் ஒரு காட்டுயானை நின்று கொண் டிருந்தது. மாலை நேரத்தில் இருள் சூழ்ந்து இருந்ததால் யானை நின்றதை இவர்கள் முதலில் கவனிக்கவில்லை.

யானையைப் பார்த்ததும் அனைவரும் தப்பி ஓடி உள்ளனர் இதில் மது யானையிடம் சிக்கிக் கொண்டார். யானை மிதித்தது மது சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறியும் வனதுறையினரும் போலீசாரும் சம்பவ இடம் சென்று மதுவின் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story