வீட்டில் மயங்கிய விழுந்த தொழிலாளி சாவு !

வீட்டில் மயங்கிய விழுந்த தொழிலாளி சாவு !

தொழிலாளி சாவு 

குறும்பனையில் வீட்டில் மயங்கிய விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள குறும்பனை பகுதி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் குமரேசன் (50). இவரது மனைவி ஈஸ்வரி (35). கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குமரேசன் திடீரென வாந்தி எடுத்தார். ஆனால் அவர் மருத்துவமனை செல்லாமல் வீட்டில் படுத்து இருந்தார். மீண்டும் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே அவரது மனைவிய ஈஸ்வரி 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து சென்று அவரை பரிசோதனை செய்தனர். அப்போது ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இது குறித்து ஈஸ்வரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story