மரம் வெட்டும் பொழுது தவறி விழுந்த தொழிலாளி பலி

மரம் வெட்டும் பொழுது தவறி விழுந்த தொழிலாளி பலி

தொழிலாளி பலி

மயிலாடுதுறை அருகே ஆவிழிக் கரையில் மரம் வெட்டும் பொழுது மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மயிலாடுதுறை அருகே ஆவிழிக்கரையில் சீமான் மகன் சங்கர் (54 என்பவர் வசித்து வந்தார் .அவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணத்தால் இரண்டு பிள்ளைகளுடன் வாதியைவிட்டு பிரிந்து விட்டார். அதிலிருந்து சகோதரர் நடராஜன் வீட்டிலேயே தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று சுந்தர பாண்டியன் என்பவர் வீட்டு மரத்தை வெட்டும் பொழுது மரத்திலிருந்து தடுமாறி சங்கர் கீழே விழுந்து நெஞ்சில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சங்கரின் சகோதரர் நடராஜன் (48) அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

Tags

Next Story