போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

பைல் படம்

லால்குடியை சேர்ந்த தொழிலாளிக்கு போக்சோ வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள இருதயபுரம் மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் டே. ஜான்ஜோசப் (48). உணவகத் தொழிலாளியான இவா் கடந்த 26.12. 2019 இல் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் லால்குடி மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ஜான்ஜோசப்பை கைது செய்தனா். திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்ஸன் குற்றவாளி ஜான்ஜோசப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஜாகீா்உசேன் ஆஜரானாா்.

Tags

Next Story