பவானிசாகர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பவானிசாகர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பலியான தொழிலாளி

பவானிசாகர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானர்.

பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன் வயது 60 இவர் அங்குள்ள தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து விவசாய கூலி வேலை செய்து வந்தார் இந்த நிலை நேற்று தோட்டத்தில் உள்ள மின்மோட்டாரை ஆப் செய்வதற்காக சுவிட்சை அழுத்தி உள்ளார்.

அப்போது பாரதிதாசன் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உடனே அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பாரதிதாசன் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story