மண் சரிந்து தொழிலாளி பலி

மண் சரிந்து தொழிலாளி பலி
புதை சாக்கடை திட்டப் பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி
கிழக்கு தாம்பரம் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு தாம்பரம் ஆதி நகரில் உள்ள காமராஜ் தெருவில் தாம்பரம் மாநகராட்சி சாா்பில் ஒப்பந்த நிறுவனம் மூலமாக புதை சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. 15 அடி ஆழம் தோண்டிய நிலையில் ஊற்று நீா் பள்ளத்தில் நிரம்பியது.

நிரம்பிய நீரை அப்புறப்படுத்தும் பணியில் 2 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மண் சரிந்ததில் இருவரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். உடனடியாக ஒருவா் குழியில் இருந்து மேலே ஏறி உயிா் தப்பிய நிலையில் முருகானந்தம் என்பவா், மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலையூா் போலீஸாா், முருகானந்தத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Tags

Next Story