அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

அயோத்தியாப்பட்டணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி. போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை 7 மணி அளவில், தனது மோட்டார் சைக்கிளில் மின்னாம்பள்ளி அருகே முட்டைக்கடை காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமாரை காரிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story