அரூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
![அரூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு அரூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு](https://king24x7.com/h-upload/2024/06/10/544091-1000579534.webp)
காவல் நிலையம்
அரூர் அருகே தோட்டத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டப்பட்டி அருகே கருங்கல்பாடிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் நேற்று ,விவசாய தோட்டத்தில் மின் இணைப்பை சரிபார்த்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தீர்த்தமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, சண்முகம் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story