டிராக்டர் மோதி ஊழியர் பலி

டிராக்டர் மோதி ஊழியர் பலி

ஊழியர் பலி

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே டிராக்டர் மோதி ஓய்வுபெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அடுத்த பெருந்துறைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 77), ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர்.அல்போன்ஸ் பெருந்துறைப்பட்டு பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டிராக்டர் திடீரென சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அல்போன்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story