இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

மதுரையில் இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை இந்திரா நகர் அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் மூவேந்திரன், இவர் தொழிலாளி . சம்பவத்தன்றுகாலை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் முன்பு நடந்து சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகன மோதியதில் பலத்த காயமடைந்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த மூவேந்தரின் சகோதரர் சோனை முத்து அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பிச் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிய தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story