திங்கள் சந்தை அருகே தொழிலாளி மர்ம சாவு

திங்கள் சந்தை அருகே தொழிலாளி மர்ம சாவு

தொழிலாளி மர்ம சாவு

கன்னியாகுமரி மாவட்டம், தலக்குளம் பகுதியில் தொழிலாளி மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் செல்வகுமார் (48) கூலி தொழிலாளி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும் 16 வயதில் மகன் மற்றும் 14 வயதில் ஒரு மகள் உள்ளனர். செல்வகுமாருக்கு அதிக மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் குடித்து ஊதாரித்தனமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அதிக அளவில் செல்வகுமார் குடித்துவிட்டு போதையில் தள்ளாடி வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டு படுக்கையறைக்கு சென்று அவர் திடீரென மாயங்கி விழுந்துள்ளார். சசிகலா மற்றும் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது செல்வகுமார் இறந்துவிட்டது தெரிய வந்தது. இது குறித்து சசிகலா இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தார். போலீசார் செல்வகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story