ஆம்பூர் அருகே தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

ஆம்பூர் அருகே தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம், மற்றும் போனஸ் வழங்காததை கண்டித்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் (மொஹிப் ஷூஸ்), பணியாற்றும் காலணி தொழிலாளர்களுக்கு, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சரிவர ஊதியம் மற்றும் போனஸ் வழங்கததை, கண்டித்து காலணி தொழிலாளர்கள் ஏற்கனவே இரண்டு முறை தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் அப்பொழுது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களிடம் ஒரு வார காலத்திற்க்குள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசிய ஊதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததின் பேரில் தொழிலாளர்கள் போராட்டத்தை நிறுத்தி, மீண்டும் பணிக்கு திரும்பினர்.

இந்நிலையில் ஒரு வாரகாலத்திற்கு மேலாகியும், தொழிற்சாலை நிர்வாகம் ஊதியம் மற்றும் போனஸ் வழங்கவில்லையென கூறி தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் வட்டாச்சியர் குமாரி மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி கோட்டாச்சியர் பிரேமலதா போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களிடம்பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, ஊதியர் அளிப்பது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்த்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்

Tags

Next Story