தேர்தலை புறக்கணிக்கும் தொழிலாளர்கள் !

தேர்தலை புறக்கணிக்கும் தொழிலாளர்கள் !

தேர்தலை புறக்கணிக்கும் தொழிலாளர்கள்

தேர்தலை புறக்கணிக்கும் பிஸ்கட் தொழிற்சாலை தொழிலாளர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை ....
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அமைந்துள்ளது தனியார் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை. இது கடந்த 35 வருடமாக இயங்கி வந்தது, இதில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர், இந்நிலையில் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இந்த தொழிற்சாலையில் தற்காலிகமான உற்பத்தி நிறுத்தம் என மாவட்ட ஆட்சியருக்கும், தொழில்துறை சங்கத்தினருக்கும் தவறான தகவலை கூறி தொழிற்சாலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 250 ஊழியர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்கள் தொழிற்சாலையில் நிர்வாகத்திடம் சம்பள பணம் பிடிப்பு பணத்தை அரசு பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அடிக்கடி தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொழிற்சாலை வேலை பார்த்த 250 குடும்பங்களும் வாக்களிக்கப் போவதில்லை என கூறி திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் தேர்தல் வேலைக்கு சென்றதால் தங்களது வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பது சம்பந்தமாக அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பணியாளர்கள் தாசில்தாரிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்த பின்பு கூட்டம் கலைந்து சென்றனர். எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வாக்களிக்க மாட்டோம் தேர்தலை புறக்கணிப்போம் என்று கோஷமிட்டே சென்றனர்.

Tags

Next Story