சிவகங்கையில் SDPI கட்சி சார்பில் பயிலரங்கம்

சிவகங்கையில் SDPI கட்சி சார்பில் பயிலரங்கம்

 SDPI கட்சி சார்பில் பயிலரங்கம்

சிவகங்கையில் SDPI கட்சி சார்பில் பயிலரங்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி தெருவில் SDPI கட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் முகமது அசாருதீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் கலாம் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சிகள் One Buth One Branch என்ற செயல்பாட்டின் கீழ் கிராமங்கள் தோறும் கிளைகள் உருவாக்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்புவனம் புதூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் இடம் இருந்தும் நிறுத்தாமல் செல்கிற பேருந்துகளை போக்குவரத்து துறையை கவனம் எடுத்து பேருந்து நிறுத்த வசதி செய்ய வலியுறுத்தியும், திருப்பத்தூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதிகளில் பள்ளி குழந்தைகள் செல்லக்கூடிய பகுதிகளிலும் அரசு அனுமதி பெற்ற ஒயின்ஷாப்புகளை இழுத்து மூட வலியுறுத்தியும், மானாமதுரை GHயில் ஞாயிற்றுக்கிழமைகளில் அவசர சிகிச்சை சமயங்களில் எக்ஸ்ரே சென்டர் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த பயிலரங்கம் நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாநில பேச்சாளர் ஜியாவுதீன், மகளிர் அணி மாநில தலைவர் பாத்திமா கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story