உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மனித சங்கிலி

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டார்.

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டார்.

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இன்று புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி "சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்" என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், ஆட்டோ வாகனங்களில் விழிப்புணர்வு ஓட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சியர் ஓட்டினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கு.சிவக்குமார், இணை இயக்குனர் சுகாதாரம் விஜயா, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் எஸ்.பொற்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story