உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு - ஆட்சியர் துவக்கி வைப்பு

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு -  ஆட்சியர் துவக்கி வைப்பு

எய்ட்ஸ் விழிப்புணர்வு 

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் குறித்த கையெழுத்து இயக்கம், சமபந்தி போஜனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வந்தநிலையில் அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாகனத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சார நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் துவக்கி வைத்தார், இதனை தொடர்ந்து, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அரசு உதவியாளர் நம்பிக்கை மைய ஆலோசகர்கள் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக உதவி திட்ட மேலாளர் மருத்துவர கலைமணி, மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மன்றம் கட்டுப்பாடு அலகு உதவியாளர்கள்,ஆலோசகர்கள் ஆய்வக நுப்புநர்கள் மற்றும் நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையின் ஆலோசகர் பழனிவேல் ராஜா உள்ளிட்ட, நம்பிக்கை மைய ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

Tags

Next Story