வந்தவாசியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா

வந்தவாசியில்  உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா
மாற்றுத்திறனாளிகள் தின விழா 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா அம்மையப்பட்டு வட்டார வளர்ச்சி மையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பகல் நேர மைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மாம்பட்டு பெ.பார்த்திபன் தலைமை தாங்கினார்.ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். அம்மையப்பட்டு ஊ.ஒ.ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் குமார் (பொ), சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் டாக்டர் ம. சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட அரிமா சங்க தலைவர் இரா. சரவணன் பங்கேற்று, மாற்றுத் திறனாளி குழந்தைகள் இறைவனின் குழந்தைகள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார். மேலும் அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவிஞர் தமிழ்ராசா, பூங்குயில் சிவக்குமார், எய்டு இந்தியா திட்ட மேலாளர் க.முருகன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் மாற்றுத் திறனாளி சிறப்பாசிரியர் எச். லத்தீப் நன்றி கூறினார். அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

Tags

Next Story