நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் நகராட்சி சார்பில் இந்திரா நகர் பூங்காவில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் நகராட்சி மற்றும் பசுமை தமிழகம் மற்றும் ஈஷா இணைந்து இன்று மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாமக்கல்- திருச்சி சாலை இந்திரா நகர் பூங்காவில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி மற்றும் உலக சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் சண்முகம் , நகர் நல அலுவலர் கஸ்தூரி பாய்,துப்புரவு அலுவலர் திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story